top of page

முடவாட்டுக்கால் கிழங்கு சூப் பவுடர்

Mudavattukaal Soup powder

 

Quantity : 100gms

 

#முடவாட்டுக்கால்கிழங்கு

#வாதவள்ளி என்றும் #ஆகாய ராஜன் என்றும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இந்தக் கிழங்கு முடக்கு வாதம் மூட்டு வலி தசைப்பிடிப்பு ஆகிய அனைத்து வலிகளுக்கும் சிறந்த நிவாரணியாகத் திகழ்கிறது.

சித்தர்களால் மூலிகை மலை எனக் கொண்டாடப்படுகின்ற கொல்லிமலையின் மிகச் சிறப்பான அடையாளமானது இக் கிழங்கு. அரப்பளீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்லும் அனைவரும் மூலிகை சூப் அல்லது மூட்டுவலி சூப் என்ற பெயரில் இந்த சூப்பை நிச்சயமாக அருந்தி இருப்பர்.

 

#பெயர்க்காரணம் பார்ப்பதற்கு மயிர்கள் அடர்ந்த ஆட்டின் கால்களைப் போன்ற தோற்றத்தைப் பெற்றிருப்பதாலும் , #முடவன்_ஆட்டும் _கால்,

#முடக்கு_நீக்கும் கால் என்ற பெயர்களே மருவி இவ்வாறு முடவாட்டுக்கால் கிழங்கு என அழைக்கப்படுகிறது.

இக் கிழங்குகள் மண்ணில் வளர்வதில்லை. இவற்றிற்கு வேர்களும் கிடையாது.

இக் கிழங்கு கடல் மட்டத்திலிருந்து 3800 அடிகளுக்கு மேல் மலைகளின் பாறைகளில் ஒட்டி வளரும் ஒருவகையான பெரணித் தாவரமாகும்.

இவை அந்தப் பாறைகளிலுள்ள செம்பு தங்கம் இரும்பு கால்சியம் குறிப்பாக சிலிகா மற்றும்

பிற தாது உப்புக்களையும் தனது தோலில் அமைந்துள்ள தூவி போன்ற அமைப்புகளால் உறிஞ்சி வளர்கிறது.

சிலிகா அயனி, கற்பமருந்து என்பதை நாம் அறிவோம். அதனால்தான் காலங்கிநாதர் ,போகர்,வள்ளலார் போன்ற ஞான சித்தர்கள் இதனை

#காயகற்ப_மூலிகை எனக் குறிப்பிடுகிறார்கள்.

இவற்றை 48நாட்கள் தொடர்ந்து உண்டால் வாத,பித்த,கப சம்மந்தமான 4448 நோய்களை நீக்கி உடம்பானது காயகல்பம் அடையும் என்றும் குறிப்பிடுகிறார்கள் . இவ்வளவு

அற்புத ஆற்றலுடைய இக்கிழங்குமுழங்கால் மூட்டு வலி & எலும்பு பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு மட்டுமல்லாது மேலும் பல எண்ணற்ற பயன்களை தன்னகத்தே கொண்டது.

அவை

1. தாய்ப்பாலுக்கு நிகரான லாரிக் அமிலம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

2. மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் வலிக்கு மிகச்சிறந்த மருந்து.

3. கால்சியம் குறை பாட்டுக்கு குறிப்பாக குழந்தைப் பேறு முடிந்ததும் உடலில் உருவாகும் கால்சியம் சத்து பற்றாக்குறைக்கு முக்கிய நிவாரணி.

4. இவற்றில் உள்ள தாது உப்புகளான சிலிகா தங்கம் மெக்னீசியம் இரும்பு கால்சியம் ஆகிய சத்துக்கள் இயல்பாகவே விந்துவை அடர்த்தியாக மாற்றும். இதனால் இனிய தாம்பத்தியமும் சிறந்த குழந்தைப்பேறும் அமையப் பெறும்.

குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் புத்தி கூர்மை மிகவும் சிறப்பாக இருக்கும்.

5. இக் கிழங்குகளால் மூளைக்கு கிடைக்கும் மிகையான சத்துக்கள் மற்றும் ஆக்சிசன் மூலமாக உடல் புத்துணர்ச்சி அடையும்.

 

 

Mudavattu kaal Kilangu Soup Powder 100gms | முடவாட்டுக்கால் கிழங்கு சூப் பவுடர்

₹330.00Price
Quantity
    • Facebook
    • Instagram
    • YouTube
    • Google Places
    • Clubhouse_App_Logo.svg

    28/1, Perumal Malai Rd, near Water Tank, Narasothipatti, Kuranguchavadi, Salam 636004,
    Tamil Nadu, India

    +9196008 00221

    ©2021 by Aaranya Pasumaikudil. Proudly created with Wix.com

    bottom of page